கேரளா: கேரளாவில் நீபா என்னும் புதுவகை வைரஸ் தாக்குதலுக்கு 6 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் மிகவும் அரிதான மரணத்தை ஏற்படுத்தும் நீபா என்ற வைரஸ் பரவி வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 6 பேர் உயிரிழந்துவிட்டனர். வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நீபா வைரஸ் பரவல் கேரள மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.