மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளரின் வீடு சேதம்: திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மீது போலீசில் புகார்

மேற்கு வங்கம்: பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹேமந்த் சோரியின் வீட்டை மர்மநபர்கள் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஹேமந்த் சோரி கூறுகையில், ஹவுராவில் உள்ள எனது வீட்டை சேதப்படுத்தியது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் தான் என்றும், இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: