கடலூர் அருகே அதிகாலையில் சோகம்: அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்களால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

கடலூர்: வேப்பூர் அருகே அடுத்தடுத்து தனியார் பேருந்து, 2 லாரிகள், 2 கார்கள் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரிய செலூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சாலையோரத்தில் கார் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த லாரி நின்று கொண்டிருந்த காரின் மீது அதிவேகமாக மோதியது. அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.  கார் பயங்கரமாக நசுங்கியதால் காரில் சிக்கிய உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர், காரில் சிக்கிய உடல்களை நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர். இந்த கோர விபத்தில் 2 இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 2 பெண்கள், 2 குழந்தைகள், ஓட்டுனர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் என கூறப்படுகிறது. உடலைக் கைப்பற்றிய வேப்பூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட உடல்கள் வேப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் சிக்கியவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. …

The post கடலூர் அருகே அதிகாலையில் சோகம்: அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்களால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த பரிதாபம்..! appeared first on Dinakaran.

Related Stories: