துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பா.ம.க நிறுவன ர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:கல்லூரி மாணவிகளுக்கு வலைவீசும்படி நிர்மலாதேவிவை தூண்டியதாக பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகனும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கைதாகியுள்ளனர். இந்தநிலையில் பல்கலைக்கழகப் பணியாளர்கள் எவரும் போராட்டங்களில் பங்கேற்கவும், பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கவும் மதுரைப் பல்கலைக்கழக நிர்வாகம் தடை விதித்திருக்கிறது. தமது பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சும் துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை போராட்டங்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். எனவே, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரையும், புகழையும் மீட்பதற்காக போராடுவோருக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வழக்கின் விசாரணை முடியும் வரை துணைவேந்தர் பதவியிலிருந்து செல்லத்துரையை நீக்கி வைக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: