கும்பகோணம்:உடல் நலம் குன்றியதால் திவாகரன் உளறிவருகிறார்’ என்று டிடிவி.தினகரன் கூறி உள்ளார்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த சுவாமிமலையில் அ.ம.மு.க. துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று அளித்த பேட்டி:மாநில அரசு நலனுக்காகதான் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகவும், 2021 சட்டமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மாநில அரசின் நலனுக்காக அவர்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இல்லை. அவர்களுடைய சுயநலனுக்காகத்தான் இணக்கமாக இருந்து வருகின்றனர். ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை.