விராலிமலை: விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். விராலிமலையில் உள்ள மெய்கண்ணுடையாள் அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. திருச்சி சாலை அருகே உள்ள வெள்ளியம்பூர்குளம் மைதானத்தில் நேற்று காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு துவங்கியது. அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியை துவக்கி வைத்தார். திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை,திண்டுக்கல், மணப்பாறை, மதுரை, கரூர், விராலிமலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து வரவழைக்கப்ட்ட 632 காளைகள் கால்நடைதுறை மருத்துவர்கள் சோதனைக்கு பின் வாடிவாசல் வழியே அவிழ்த்து விடப்பட்டன.