கத்திரி புலாவ்

எப்படிச் செய்வது : வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் மிளகாய், சீரகம், பெருஞ்சீரகம், தனியா, வேர்க்கடலையை தனித்தனியாக வறுக்கவும். ஆறியதும் மல்லித்தழை, பெருங்காயம் சேர்த்து அரைக்கவும். அரிசியை முக்கால் பாகமாக உப்பு சேர்த்து வேக வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஆற வைக்கவும். வெங்காயம், உருளை, கத்தரிக்காயை சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் தாளிக்க கொடுத்த வாசனை பொருட்களை சேர்த்து தாளிக்கவும். காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும். காய்கறிகள் ஓரளவு வெந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியிலிருந்து 4 ஸ்பூன் சேர்த்து கிளறவும். இப்போது தீயை நன்கு குறைத்து வைக்கவும். பொடி காய்கறிகளில் நன்கு பரவியதும் வடித்து ஆறிய சாதத்தை சேர்த்து கிளறவும். சிறிது நேரம் கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவும். கமகம சுவையில் கத்திரி புலாவ் ரெடி.

The post கத்திரி புலாவ் appeared first on Dinakaran.

Related Stories: