×

சமூக வலைதளத்தில் காரசாரம்: வழுக்கை தலை குண்டு குறித்து பேசலாமா? கேலி செய்த நபருக்கு நடிகை பதிலடி

மும்பை: சமூக வலைதளத்தில் தன்னை குண்டு என்று கேலி செய்த நபருக்கு நடிகை அஞ்சலி ஆனந்த் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார். பிரபல பாலிவுட் அஞ்சலி ஆனந்த் (33), திரையுலகில் நிலவும் நிறம் மற்றும் உடல் வடிவம் சார்ந்த பாகுபாடுகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். உடல் பருமன் கொண்ட முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்ற அஞ்சலி ஆனந்த், நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில் ஒரு நபர், அஞ்சலியை ‘குண்டு’ என்று பதிவிட்டு கேலி செய்தார். இதற்கு சற்றும் தயங்காமல் பதிலடி கொடுத்த அஞ்சலி ஆனந்த், ‘எனக்குத் தெரியும் நான் குண்டு என்று, அதேபோல் உங்களுக்கும் தெரியும் நீங்கள் வழுக்கை என்று. குண்டாக இருப்பவரை குண்டு என்றும், வழுக்கையாக இருப்பவரை வழுக்கை என்றும் தான் சொல்வார்கள். இது உங்களுக்கு புரிகிறதா? அல்லது இன்னும் விளக்க வேண்டுமா?’ என்று பதிவிட்டு அந்த நபரின் வாயடைக்கச் செய்தார். இதைத் தொடர்ந்து இன்ஸ்டாவில் அஞ்சலியை ஆதரித்து அந்த நபருடன் காரசார விவாதங்களை ரசிகர்கள் நடத்தினர்.

Tags : Mumbai ,Anjali Anand ,Bollywood ,
× RELATED மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சூரி