×

யாருக்கும் அருகதை இல்லை: செல்வராகவன் ஆவேசம்

சென்னை: தன்னைப் பற்றி வரும் விமர்சனங்களுக்கு கோபத்துடன் பதிலடி தந்துள்ளார் செல்வராகவன். இயக்குனர் செல்வராகவன், சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு வீடியோ இணையத்தில் சலசலப்பை உருவாக்கியிருக்கிறது. அந்த வீடியோவில் அவர் பேசும்போது, ‘‘உன்னால் முடியாது, உனக்கு திறமை இல்லை என்று கூறுவோருக்கு அப்படிச் சொல்லும் தகுதியே கிடையாது. தங்களிடம் ஆயிரம் குறைகளை மூட்டை கட்டிக்கொண்டு அடுத்தவரை நோகடிப்பவர்களை ஒரு பொருட்டாக மதிக்கவேண்டாம். மனசாட்சியோடு உழைத்தால், லட்சியம் தானே கை கொடுக்கும் என்றும், பிறர் வார்த்தைகளில் சிக்கிக்கொண்டால் வாழ்க்கை தேங்கிவிடும். யாரைப் பற்றியும் கருத்து சொல்ல யாருக்கும் அருகதை இல்லை’’ என பேசியிருக்கிறார். கடந்த சில நாட்களாக சில நெட்டிசன்கள் அவரை கேலி செய்துவந்தனர். இதனாலேயே அவர் இப்படி ஆவேசமாக வீடியோ வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Selvaraghavan ,Chennai ,
× RELATED சமூக வலைதளத்தில் காரசாரம்: வழுக்கை தலை...