விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

திருவள்ளூர்: சென்னை மண்டல விதை ஆய்வு துணை இயக்குனர் கலாதேவி, விதை ஆய்வாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்திற்கு விற்பனை செய்யப்படும் விதை நெல் ரகங்களில் தரத்தினை உறுதி செய்ய தனியார் மற்றும் அரசு விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விதை விற்பனை நிலையங்களில் உரிமம் பெற்றும் தகுந்த ஆவணங்களுடன் விற்பனை மேற்கொள்ள வேண்டும் என்றும், காலாவதியான உரிமத்தின் மூலம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். மேலும் நெல் விதைகளின் முளைப்பு திறனை உறுதி செய்ய விற்பனையாளர்கள் பணி விதை மாதிரிகளை உடனுக்குடன் விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி பரிசோதனை முடிவை பெற்று தகுந்த பதிவேடுகளில் பராமரிக்க வேண்டுமென உத்தரவிட்டனர்….

The post விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: