ஐதராபாத்: ராஷ்மிகா மந்தனாவை காதல் திருமணம் செய்யும் விஜய் தேவரகொண்டா, முதல்முறையாக அதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை ஷேர் செய்துள்ளனர். அதில், ‘நாங்கள் எந்தவொரு பிளான் செய்வதற்கு முன்பும், நாங்கள் எங்களுக்காக எதை தேர்ந்தெடுப்பதற்கும் முன்பும், நீங்கள் எங்களுடன் இருந்திருக்கிறீர்கள். அதீத அன்புடன், நீங்கள் எங்களுக்கு ‘VIROSH’ என்ற பெயரை கொடுத்தீர்கள்.
எங்களை அப்படி அழைத்தீர்கள். அதனால், இன்று நிறைந்த மனதுடன் உங்கள் முன்னிலையில் நாங்கள் இணைகிறோம். அதற்கு ‘The Wedding of VIROSH’ என்று பெயரிட விரும்புகிறோம். உங்களுடைய அதீத அன்பால் எங்களை பற்றியிருப்பதற்கு நன்றி. எப்போதுமே நீங்கள் எங்களில் பாதி’ என்று குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் பதிவு வைரலாகி வருகிறது.
