புதுடெல்லி: என்.டி.,ராமராவின் படத்துடன் 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்த என்.டி.ராமராவ், ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராகவும் இருந்தார். என்டிஆர், 1923ம் ஆண்டு பிறந்தவர். இந்த ஆண்டு அவரது நூற்றாண்டு ஆகும். இதனால் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.