திருவனந்தபுரத்தையே ஆட்டிப்படைக்கும் தாதா, கோட்ட மது (பிருத்விராஜ்). அவருக்கு எதிர்க்களத்தில் உள்ள தாதா, லத்தீப் (திலீஷ் போத்தன்). இரு கோஷ்டிகளும் அடிக்கடி மோதிக்கொள்ளும், ரத்தம் சிந்தும், பழிக்குப்பழி வாங்கும். அண்ணனை பிருத்விராஜ் கொல்வதை நேரில் பார்க்கும் லத்தீப்பின் மகள் அன்னா பென், அந்த ரத்தக்களத்தில் இருந்து விலகி, கணவர் ஆசிஃப் அலியுடன் பெங்களூருவில் வசிக்கிறார். பணி மாறுதலாகி திருவனந்தபுரம் வரும்போதுதான் பிரச்னை தொடங்குகிறது. வந்த இடத்தில் அன்னா பென்னின் பெயர், போலீஸ் லிஸ்ட்டில் குண்டர்கள் பட்டியலில் இருக்கிறது என்பது கணவர் ஆசிஃப் அலிக்கு தெரியவருகிறது. அப்பட்டியலில் இருந்து அவரை நீக்க, இருதரப்புடனும் பேசுகிறார். அரசியலில் கால்பதித்து வேறு பாதைக்கு திரும்ப நினைக்கும் பிருத்விராஜ், திலீஷ் போத்தனுடனான பகையை முடிவுக்குக் கொண்டு வர நினைக்கிறார். அதற்கு மீடியேட்டராக ஆசிஃப் அலி இருக்கிறார். ஆனால், நடப்பது வேறு. அது என்ன என்பது படத்தின் ட்விஸ்ட்.