சென்னை: படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய் காயம் அடைந்தார். அருண் விஜய், எமி ஜாக்சன் நடிக்கும் படம் அச்சம் என்பது இல்லையே. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது. அப்போது சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. இதில் நடித்தபோது, அருண் விஜய்க்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மீண்டும் அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இது பற்றி அருண் விஜய் கூறும்போது, ‘சண்டைக் காட்சியில் காயம்படுவது இது முதல் முறை கிடையாது. பலமுறை காயம் அடைந்துள்ளேன். சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடிக்கிறேன். இதனால் விபத்துக்குள்ளாவது இயல்புதான்’ என்றார்.