வெப்சீரிசுக்கு வந்தார் திரிஷா

சென்னை: பிருந்தா என்ற வெப்சீரிஸில் நடித்து வருகிறார் திரிஷா.  நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பலரும் கொரோனா பாதிப்புக்கு பிறகு ஓடிடியில் கவனத்தை திருப்பி வருகின்றனர். அஜய் தேவ்கன், அனில் கபூர், விஜய் சேதுபதி, மாதவன், பிருத்விராஜ், துல்கர் சல்மான், ஷாகித் கபூர், காஜல் அகர்வால், தமன்னா, ராசி கன்னா, பிரியாமணி, இயக்குனர்கள் வெங்கட் பிரபு, கவுதம் மேனன், பாலாஜி மோகன், வெற்றிமாறன் உள்பட பலர் வெப்சீரிஸ்களில் நுழைந்துள்ளனர்.

அந்த வரிசையில் இப்போது திரிஷாவும் இணைந்துள்ளார். 38 வயதாகும் திரிஷாவுக்கு சினிமாவில் புதிய வாய்ப்புகள் வரவில்லை. கடைசியாக அவர் ஒப்பந்தமான பொன்னியின் செல்வன், சதுரங்க வேட்டை 2, ராங்கி ஆகிய படங்கள் திரைக்கு வருவதில் தாமதமாகி வருகிறது. இந்நிலையில் தெலுங்கில் பிருந்தா என்ற வெப்சீரிஸில் நடிக்க வந்த வாய்ப்பை திரிஷா ஏற்றுள்ளார். இதில் அவர் ஐதராபாத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

Related Stories: