முன்னணி மலையாள நடிகையான ரீமா கல்லிங்கல் 2011ம் ஆண்டு யுவன் யுவதி என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது சித்திரை செவ்வானம் என்ற படத்தில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சில்வா மாஸ்டர் இயக்குகிறார் என்றபோது ஒரு அதிரடி ஆக்சன் படம் என்று தான் முதலில் நினைத்தேன். திரைக்கதையை படித்தபின் ஆச்சர்யமாக இருந்தது. சில்வா இப்படி ஒரு படம் செய்கிறார் என நம்ப முடியவில்லை. அவருடன் இணைந்து பணிபுரிந்த பின் தான் தெரிந்தது அவர் எத்தனை குழந்தை மனம் கொண்டவர் என்று, மிக நல்ல மனிதர்.