சென்னை: நடிகை பிரக்யா ஜெய்ஸ்வாலுக்கு கொரோனா அறிகுறி இருப்பதால், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். பாலிவுட் நடிகையான பிரக்யா ஜெய்ஸ்வால், தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் விரட்டு படத்தில் நடித்திருந்தார். இப்போது பாலகிருஷ்ணா ஜோடியாக அகந்தா படத்திலும் இந்தியில் சல்மான் கானுடன் அந்திம் படத்திலும் நடித்து வருகிறார். இதுகுறித்து பிரக்யா கூறும்போது, ‘நான் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். ஆனால், எனக்கு தற்போது கொரோனா அறிகுறிகள் இருப்பதால் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன்.