மீனவ குப்ப கதையாக உருவாகிறது எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும். இதுபற்றி பட இயக்குனர்கள் கே.எஸ்.சரவணன், அபுபக்கர் கூறியது:
மீனவ குப்ப தலைவர் சந்திரா அங்குள்ள மக்களுக்கு உதவுகிறார். இது அதே குப்பத்தில் உள்ள 4 படகு உரிமையாளர்கள் தொழிலுக்கு பாதிப்பாகிறது. எனவே அவர்கள் சந்திராவை தீர்த்துக்கட்ட எண்ணுகின்றனர். திடீரென்று சந்திரா காணாமல் போகிறார். காணாமல்போன தனது தாயை தேடத் தொடங்குகிறான் மகன். அதன்பிறகு திடுக்கிடும் சம்பவங்கள் அம்பலத்துக்கு வருகிறது.