அழகிய கண்ணே... உறவுகள் நீயே... மகளை கொஞ்சும் சமீரா

உதிரிப்பூக்கள் படத்தில் இளைராஜா இசையில் எஸ்.ஜானகி பாடிய அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி நான் அங்கே... என்ற பாடல்தான் நடிகை சமீரா ரெட்டியின் இன்ஸ்டா பதிவை காணும்போது நினைவுக்கு வருகிறது. சில மாதங்களுக்கு முன் சமீரா ரெட்டி அழகான பெண் குழந்தை பெற்றெடுத்தார். மகிழ்ச்சி பொங்க குழந்தையை தூக்கி கொஞ்சுவதுபோல் சில படங்களை அவர் நேற்று வெளியிட்டார்.

அதில் ஒரு படம் பலரையும் கவர்ந்தது அதற்கு காரணம் அந்த படத்துடன் பதிவிட்ட மெசேஜ். அதில் சமீரா கூறியிருந்ததாவது: பெண் குழந்தையை இந்த குதூகலத்துடன் கொஞ்சுவதில் இன்பமோ இன்பம். பெண் குழந்தைகளை நம் நாட்டில் பாரமாக கருதுவதுபற்றி என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அதெல்லாம் அந்த காலம். தற்போதைக்கு அந்த எண்ணம் உண்மையிலேயே மாறியிருக்கிறது. இப்போதுகூட சில பெரிய குடும்பங்களில் முதல் குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன். எங்கள் குடும்பத்தில் 3 பெண்கள், எந்த ஒரு ஆணையும் விட நாங்கள் சாதித்திருப்பது அதிகம்.

Related Stories: