கடந்த 2017ம் ஆண்டு உலக அழகியாக தேர்வானவர் மனுஷி சில்லர். அரியானாவை சேர்ந்தவர். ஏற்கனவே இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அதை தவிர்த்து வந்தார். தற்போது புதிய படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இது அவர் அறிமுக படமாகும். துணிச்சலான மன்னர் என வரலாற்றில் புகழப்பெறும் பிரித்விராஜ் சவுஹானின் வாழ்க்கையை பின்னணியாக கொண்ட சரித்திர படமாக இது உருவாகிறது. இப்படத்துக்கு பிருத்விராஜ் என பெயரிடப்பட்டிருக்கிறது.