வேண்டியவர்களுக்கு அனைத்தையும் வழங்கும் ஸ்ரீ கருமாரியம்மன் வழிபாடு..!!

மனிதன் என்றுமே தனித்து வாழ முடியாது. இதற்காக தான் திருமணம், குடும்பம் போன்றவை நமது சமுதாயத்தில் ஏற்படுத்தபட்டன. நமக்கு இறுதிவரை துணையிருப்பது நமது குடும்பம் தான். சிலருக்கு பல காரணங்களால் அவர்களின் ஒட்டு மொத்த குடும்பமே பொருளாதார ரீதியில் சிரமப்படுகிறது. மேலும் அவர்களுக்கு உடல் மனரீதியான பிரச்சனைகளும் ஏற்படுகிறது. வேண்டியவர்களுக்கு அனைத்தையும் வழங்குபவள் ஸ்ரீ கருமாரியம்மன்.

திருவேற்காடு கருமாரி அம்மன் தலத்தில் எந்தெந்த நாட்களில் வழிபாடு செய்தால், என்னென்ன பிரச்சனைகள் தீரும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

 

ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை - நீண்ட ஆயுள் கிடைக்கும்.

மாசி மாத அமாவாசை - குழந்தை பாக்கியம் உண்டாகும்.

மாசி பவுர்ணமி - எதிரிகளை வெல்லலாம்.

தை மாத ஞாயிற்றுக்கிழமை - தீய சக்திகள் விலகும்.

தை மாத பவுர்ணமி - பல புனித நதிகளில் நீராடிய பலன்.

தை மாத அமாவாசை - நோய்கள் குணமாகும்.

பூச நட்சத்திர தினம் - அரிய செல்வம் சேரும்.

பூர நட்சத்திரம் - கலைகளில் வல்லமை பெறலாம்.

சித்திரை மாத பவுர்ணமி - நினைத்தது நிறைவேறும்.

புரட்டாசி, ஐப்பசி மாத பவுர்ணமி நாட்கள் - புனிதம் பெறலாம் பாவம் நீங்கும்.

Related Stories: