தேவையான பொருட்கள்:-
உதிராக வடித்த சாதம் - 2 கப், எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்,
கடுகு -1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.பொடிக்க: முழு உளுந்து - 4 டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு -1 டேபிள் ஸ்பூன், கொப்பரைத் தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் - 8, பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றை, மிதமான தீயில் சிவக்க வறுத்துப் பொடிக்க வேண்டும்.. நெய்யில் கடுகு, கறிவேப்பிலையை தாளித்துப் பொடியோடு சேர்த்துக் கலக்க வேண்டும்.. சாதத்தில், பொடித்து வைத்துள்ள பொடி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்துக் கிளறி நிவேதனம் செய்யவும்.