தேவையானவை:
கேரட்- 6வறுத்த, தோல் நீக்கிய நிலக்கடலை- 3 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவுஉதிர் உதிராக வேக வைத்த பாசுமதி அரிசி- 4 கப்
வறுத்து அரைக்க:வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 தேக்கரண்டிகடலைப்பருப்பு- 1/2 தேக்கரண்டிமிளகு- 6சீரகம்- 1/2 தேக்கரண்டிகறிவேப்பிலை- 10 இலைகள்மிளகாய்வற்றல்- 5
தாளிக்க:நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டிகடுகு- 1 தேக்கரண்டிகடலைப்பருப்பு- 1 தேக்கரண்டிவெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டிபெருங்காயம்- 1/2 தேக்கரண்டிகறிவேப்பிலை- 1/2 இணுக்குகொத்தமல்லி- அலங்கரிக்க
செய்முறை: பாசுமதி அரிசியை உதிர் உதிராக வேக வைத்து வாயகன்ற பாத்திரத்தில் ஆற வைத்துக் கொள்ளவும். கேரட்டை சுத்தம் செய்து தோலைச் சிறிதளவு நீக்கி(தோலிற்கு நெருக்கமான பகுதியில் தான் உயிர்ச்சத்து உள்ளதால் அதிகம் நீக்கத் தேவையில்லை) துருவி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயிட்டு தாளிதப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு துருவிய கேரட்டை உப்பு சேர்த்து வதக்கவும். இன்னொரு வாணலியில் வறுக்கக் கொடுத்த பொருட்களை(சீரகத்தை மட்டும் கடைசியில் சேர்க்கவும்) வறுத்து பொற பொறவென்று அரைத்து வைக்கவும். கேரட் வெந்ததும் இந்தப் பொடியைச் சேர்த்து, தனியே வறுத்து வைத்திருக்கும் நிலக்கடலையையும் சேர்த்துக் கிளறவும். கேரட் கலவையைச் சிறிது ஆற விடவும், பின் ஆற வைத்திருக்கும் சாதத்துடன் சேர்த்துக் கிளறி கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். சுவையான, எளிதான, ஆரோக்கியமான கேரட் சாதம் தயார்.வித்தியாசமான கேரட் பிரசாதம் தயார்.