ராமபக்த தூதன்
ஆசை சுயநலம்
மிகுந்த வாழ்வில்அல்லல்படும் மனதை
அணைத்து காத்திடுவான்அன்பெனும் சொல்கேட்டுஆனந்தக் கண்ணீர் ஆறாகும்!ஆபத்தில் அபயம் தரும்சேவை சிகரமே வலிமை உருவேவானர வீரனேவாயு குமாரனேதன் பெயர் மறந்துராம நாமத்தில் மூழ்கும்சிறிய திருவடி சரணம்!கானகம் புகுந்துகடல்மேல் பறந்துதீவை அடைந்துகாவனம் நடுவேகரியசெம்மல் நினைவில்கண்ணீர் உணவாககற்பு அணியாககவலையே ஆடையாகக் கொண்டகாரிகை சீதையைக் கண்டுகணையாழி தந்து அவரிடம்சூளாமணி பெற்றுதிருவினை புரி்ந்துதிரும்பினான் கானகம்‘கண்டேன் சீதையை’ எனும்தூது செய்தியால் ராகவன் மனநோய்க்கு சஞ்சீவினி தந்தபராக்கிரம சிரஞ்சீவி வாழ்க!மறைபொருள் தரும் மறைகள் எதற்குமாருதியின் சேவையே தனிச்சிறப்புசிரம் மேல் கரம் குவித்தோம் ஆஞ்சநேயாசீறடி துணை கொண்டோம் ஆஞ்சநேயா!ராமன் மீதான அன்பைமன்றத்தில் மனம் திறந்தாய்ரத்தினங்கள் மதிப்பிழக்கமாபெரும் புகழ் கொண்டாய்!குறையிலா அகஅழகு சுந்தரனேகுறிப்பறிந்து பேசும் சொல்லின் செல்வனேதன்னடக்க தவசீலனேதீமைக்கு எதிராக தீவைத்து விளையாடும் வானரமே!ராவணன் மனதில்அச்சம் துளிர வைத்தவனே!தீதில்லா மனமே ராமன் கோயில்தூது வருவாய் ஆஞ்சநேயா!