×

ஐயனுக்கு அரவனை


ஒரு சமயம், ஆனைமுகப்பெருமான், தன் இளைய சகோதரனான பாலசாஸ்தாவை தன் மூஷிக வாகனத்தில் அமர்த்திக் கொண்டு அகில  உலகமெங்கும் வலம் வந்து கொண்டிருந்தார். அதனை அறிந்த சரஸ்வதி தேவி அவர்களை தங்கள் லோகமான சத்யலோகத்துக்கு அழைத்தாள்.  ‘‘சிவ  மைந்தர்களான சாஸ்தாவும், விநாயகரும் நமது லோகத்துக்கு வருகிறார்கள். அவர்களை வரவேற்று நல்ல முறையில் உபசரிக்க வேண்டும்’’ என்று  கலைமகள், தன் நாயகரை நோக்கி வேண்டிக்கொண்டாள்.  இதனையடுத்து ரிஷிகளும், யோகிகளும் புடைசூழ, விநாயகரையும் சாஸ்தாவையும்  வரவேற்க பிரம்மதேவன் பூர்ண கும்பத்தோடு சென்றார்.சத்யலோகத்துக்கு வந்த சகோதர்களை வேத கோஷங்கள் முழங்க வரவேற்னர். நான்முகனும்,  கலைவானியும். 64 வகை உபசாரங்களையும் செய்து மகிழ்ந்தார்கள்.

முதலாவதாக நறுமணமிக்க நீரால் மங்கள நீராட்டினர். அதன் பின்னர் விநாயகருக்கு வெண்ணிறபட்டாடையும், மகா சாஸ்தாவுக்கு மஞ்சள் நிறப்பட்டாடையும் அளித்தனர். பின்னர் இருவரையும் ஆசனங்களில் அமர வைத்து அறுசுவையோடு உணவளித்து மகிழ்ந்தார்கள். ஏகதந்தனுக்கு மோதகத்தையும், மகா சாஸ்தாவுக்கு சர்க்கரைப் பொங்கலையும் வழங்கினாள் சரஸ்வதி. விநாயகரும் மோதகத்தை விரும்பி உண்டார். பகவானும் ‘‘கலைவாணியே! என் மீது கொண்ட அன்பினால் நீங்கள் எனக்களித்த மஞ்சள் பட்டாடையும், சர்க்கரைப் பொங்கலும் எனக்கு மிகவும் மனநிறைவை அளிக்கிறது.உங்கள் அன்பின்  வெளிப்பாடாக நீங்கள் அளித்த இந்த மஞ்சள் பட்டும் சர்க்கரைப் பொங்கலும் இனி எனக்கு என்றும் பிரியமானவையாக இருக்கும். இவற்றை எனக்கு அளிப்பவர் எனது அருளை எளிதில் பெறுவர்’’ என்று வரமருளினார்.

Tags : Ian ,
× RELATED நான் முதல்வன் திட்ட ஊக்கத்தொகையை...