திருச்செந்தூர் கோயிலில் சித்திரை வசந்த திருவிழா துவங்கியது

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில்  சித்திரை வசந்த திருவிழா நேற்று துவங்கியது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சித்திரை வசந்த திருவிழா நேற்று தொடங்கி வரும் 19ம் தேதி 10 நாட்கள் நடைபெறுகிறது. நேற்று பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனை முடிந்ததும் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் தங்கச்சப்பரத்தில் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் மாலையில் சுவாமி, அம்மாளுடன் 11 முறை வசந்த மண்டபத்தை சுற்றி வலம் வந்து இரவில் கிரிவீதி வழியாக கோயிலை சேர்ந்தார். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories: