ஓங்கார ஸ்ரூபமாக உள்ள நமது ஞான ஸ்கந்த ஸ்வாமிநாதன் பல திருவுருவம் எடுத்து பல லீலா விநோதங்கள் நிகழ்த்தியுள்ளார். அவற்றில் சூரபத்மனுக்கு தனது விஸ்வரூபத்தை காண்பித்தது தான் மிகவும் பிரமிக்க வைக்கும் விஷயமாகும். இவ்விஷயத்தை ஸ்கந்த புராணம், சங்கர சம்ஹிதை மற்றும் சிவரஹசிய கண்டம் ஆகியவற்றிலிருந்து நாம் அறியலாம். போரின்போது சூரபத்மன் பலப்பல மாய வடிவங்கள் எடுத்து யுத்தம் செய்தான். குமாரக் கடவுளாம் ஆதிபகவன், அவன் செய்கையைத் திருநோக்கஞ் செய்து புன்சிரிப்பு உதிர்த்தார். ஆயிரங்கோடி எண்ணிக்கைக் கொண்ட கொடும் பாணங்களைப் பொழிந்தார்.