நத்தம்: நத்தம் அருகே சேர்வீடு வேட்டைக்காரன் சுவாமி கோயில் திருவிழாவையொட்டி நேற்று காலை மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகளுடன் வேட்டைகாரன் சுவாமி மற்றும் குதிரை, மதலை சிலைகள், செய்யப்பட்ட நிலையில் நத்தத்தில் செந்துறை செல்லும் சாலைப்பகுதியில் உள்ள அவுட்டரை வந்தடைந்தது. அங்கு வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகளுடனும் தீவட்டி பரிவாரங்களுடன் வேட்டைக்காரன் சுவாமி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.