திருச்செந்தூர் புளியடி சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா

திருச்செந்தூர்: திருச்செந்தூர் ஸ்ரீபுளியடி சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழாவை  முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். திருச்செந்தூர்  புளியடித்தெருவில் உள்ள ஸ்ரீசந்தனமாரியம்மன் கோயில் கொடை விழா விமரிசையாக நடந்தது.  இதையொட்டி காலை ஸ்ரீசந்தனவிநாயகர், ஸ்ரீசந்தனமாரி  அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். தொடர்ந்து இரவு சிறப்பு அபிஷேக,  அலங்கார  தீபாராதனை நடந்தது. அதைத்தொடாடர்ந்து அம்மன் புஷ்ப  அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.  நேற்று மாலை மஞ்சள் நீராட்டு நடந்தது. ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர்  செய்திருந்தனர்.

Related Stories: