வலையபட்டி கழுதை புரளி குளம் காட்டேரி வீரன் சுவாமி கோயிலில் பொங்கல் விழா

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே வலையபட்டி கழுதை புரளி குளத்தில் உள்ள காட்டேரி வீரன் சுவாமி கோயிலில் சலவை தொழிலாளர்கள் சார்பில் 49ம் ஆண்டு துறைப்பொங்கல் விழா நடந்தது. வலையபட்டி மலையாண்டி கோயில் அருகில் உள்ள பிள்ளையார் கோயிலில் பொங்கல் கூடைவைத்து வழிபாடு செய்து அங்கிருந்து பொங்கல் கூடை சுமந்து கொட்டும் மழையில் ஊர்வலாமாக எடுத்துச் சென்றனர். கழுதை புரளி குளத்தில்  காட்டேரி வீரன் கோயில் முன்பு மழையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: