திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில், தை மாத பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயிலில், தை பிரமோற்சவ விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா இன்று அதிகாலை 5.45 மணிக்கு மகர லக்னத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தங்க சப்பரத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7 மணிக்கு சிம்ம வாகனத்தில் உற்சவர் வீரராகவர் வீதியுலா வருகிறார்.