புதுச்சத்திரம் அருகே மாற்று பாதையில் சாலை அமைக்க வலியுறுத்தல்

சேந்தமங்கலம் : புதுச்சத்திரம் அருகே மாற்று பாதையில் தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புதுச்சத்திரம் ஒன்றியம், கோவிந்தம்பாளையம் ஊரிலிருந்து கண்ணூர்பட்டி.  கதிராநல்லூர், நத்தமேடு வழியாக சிங்களாந்தபுரம் வரை சாலை மேம்பாட்டு பணி நடைபெற்று வருகிறது. சாலை பணிக்காக அங்குள்ள தரை பாலத்தை மாற்றி புதிய தரைப்பாலம் அமைக்கும் பணிகளும் நடக்கிறது. பொடங்கம் அருகே பாலத்தினை மாற்றி புதிய தரைப்பாலம் அமைக்க பணிகள் நடந்து வருகிறது. இதற்காக மாற்று வழி சாலை மண்ணைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதியில் மழை பெய்து வருவதால், மண் சாலை சேறும், சகதியுமாக மாறி உள்ளது. அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் சென்றுவர பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அரசு அலுவலகங்களுக்குச் செல்வோர் உரிய நேரத்தில் செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, இந்த சாலையில் தற்காலிகமாக தார் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post புதுச்சத்திரம் அருகே மாற்று பாதையில் சாலை அமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: