திருவானைக்காவல் திருக்கோயிலில் அருள்பாலிக்கும் அன்னை அகிலாண்டேஸ்வரி காலையில் லட்சுமி தேவியாகவும், உச்சிவேளையில் பார்வதி தேவியாகவும், மாலையில் சரஸ்வதி தேவியாகவும் திகழ்வதாக ஐதீகம். அன்னைக்குப் பகல் நேரத்தில் பல வண்ண ஆடைகள் அணிவித்தாலும் இரவில் வெண்ணிற ஆடையை மட்டுமே அணிவிப்பது வழக்கம். இந்த அம்பாளுக்கு அகிலாண்டேஸ்வரி, அகிலாண்ட நாயகி, அகிலாண்டவல்லி, தண்டினி, தண்டநாயகி, சிதானந்த ரூபினி, ஞானமுதல்வி, கெளரி, பராபரை, மங்கை, குண்டலி, திரிபுர ஆயி, நாதவடிவி, அகிலம் புரத்தவள் என்று பல திருநாமங்கள் உண்டு.