திருச்சி: திருவானைக்காவல் கோயிலில் வருகிற டிசம்பரில் கும்பாபிஷேகம் நடக்கிறது. திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி கோயில் பஞ்சபூ தலங்களில் நீர் ஸ்தலமாகும். கடந்த 12.7.2000ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு 18 வருடங்கள் ஆன நிலையில் கும்பாபிஷேகம் செய்யப்படவில்லை. இதையடுத்து பக்தர்களால் கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.5 கோடி வரை திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து 96 பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ரூ.3.50 கோடி தமிழகத்தில் பல் வேறு நகரங்களில் இருந்தும் பக்தர்களிடம் நிதியுதவி பெறப்பட்டு திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது.