ஏரல்: சிவத்தையாபுரம் முத்துமாலை அம்மன் கோயிலில் ஆடிக்கொடை விழா விமரிசையாக நடந்தது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். சாயர்புரம் அருகேயுள்ள சிவத்தையாபுரம் முத்துமாலை அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிக்கொடை விழா கடைசி செவ்வாய்க்கிழமையன்று விமரிசையாக நடைபெறும். இதன்படி இந்தாண்டுக்கான கொடை விழா கடந்த 8ம் தேதி துவங்கியது. கொடை விழாவான நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு பால்குட ஊர்வலமும், நண்பகல் 12 மணிக்கு முத்துமாலை அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இரவு 8 மணிக்கு ஆனந்த விநாயகருக்கு மாலை சாத்தி சிறப்பு வழிபாடும், இரவு 8.30 மணிக்கு ஸ்ரீமன் நாராயண சுவாமிக்கு மாலை சாத்தி சிறப்பு பூஜையும் நடந்தது.