புதுக்கோட்டை: திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயிலில் ஆடிபெருந்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேஷ்வரர் கோயில் புகழ்பெற்ற கோயிலாக திகழ்கிறது.புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட தொண்டைமான் மன்னர்களின் குலதெய்வமாகவும் இக்கோயில் இருந்து வந்துள்ளது. மேலும் தேவலோகத்தில் தேவேந்திரனுடைய திருச்சபை கூடிய போது தாமதமாக வந்த காமதேனுவை பூலோகத்தில் காட்டு பசுவாக பிறக்கும்படி தேவேந்திரன் சாபமிட்டதாகவும் காமதேனு பூலோகத்தில் திருக்கோகர்ணத்தில் பசுவாக பிறந்து தன் காதுகளில் அன்றாடம் கங்கை நீரை கொண்டு வந்து அன்றாடம் பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேஷ்வராக அருள்பாலித்த சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வந்து சாபவிமோசனம் பெற்றதாக வரலாறு.