பாடகர் இசை அமைத்து தயாரிக்கும்: ‘நல்லபேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’

 

சென்னை: திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார் தயாரிப்பில் சித்தார்த் நடித்த ‘எனக்குள் ஒருவன்’ என்ற படத்தின் மூலம் இயக்குனரான பிரசாத் ராமர், ‘அருணகிரி பெருமாளே’ என்ற ஆன்மீக ஆவணப்படத்தை தயாரித்த பூர்வா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம், ’நல்லபேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’. இதை பாடகர் பிரதீப் குமார் தயாரித்துள்ளார். மேலும், இசை அமைத்து பாடல்களை எழுதியுள்ளார். செந்தூர் பாண்டியன், பிரீத்தி கரன், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்ச்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜூ, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம்.அமுதா ராணி, மினு வாலன்டினா நடித்துள்ளனர். உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். மதுரையில் இருந்து தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம் வழியாக 2 இளைஞர்கள் மாயவரம் செல்கின்றனர். பிறகு அவர்கள் பூம்புகார் செல்வதற்கு முன்பு ஒரு பெண்ணும் இணைகிறாள். அப்போது அவர்கள் சந்திக்கும் அவலங்களையும், அவர்கள் மீதான அணுகுமுறையையும் பற்றி படம் சொல்கிறது.

The post பாடகர் இசை அமைத்து தயாரிக்கும்: ‘நல்லபேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: