நாகை: கொடியேற்றத்துடன் சுவர்ண புரீஸ்வரர் கோயிலில் வைகாச விசாகம் பெருவிழா துவங்கியது. நாகை ஒன்றியம் தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தில் குபேரன், பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட பழமை வாய்ந்த சுவர்ண புரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணியர் அம்பாள், விநாயகர், சண்டிகேஸ்வரர் பாலசுப்பிரமணியர் ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில கொடிமரத்திற்கு எழுந்தருளினர்.