காஞ்சிபுரம் அருகே நெல் கொள்முதல் நிலையம்: எம்பி, எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள கூரம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திமுக மாணவர் அணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க .செல்வம் துவக்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிஎம் குமார் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் நித்யா சுகுமார், திமுக நிர்வாகிகள் எம். எஸ். சுகுமார், ஆர். செழியன், பி. எம். நீலகண்டன் மற்றும் தலைவர் ஊராட்சி கவுன்சிலர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து காஞ்சிபுரத்திலிருந்து தைப்பாக்கத்துக்கு புதிய வழித்தட பேருந்து காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்….

The post காஞ்சிபுரம் அருகே நெல் கொள்முதல் நிலையம்: எம்பி, எம்எல்ஏ தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: