ஸ்ரீபெரும்புதூரில் 4 ஆண்டுகளாக திருநங்கையுடன் குடும்பம் நடத்திய வாலிபர் தற்கொலை

ஸ்ரீபெரும்புதூர்: திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (25). ஸ்ரீபெரும்புதூர் ஏரிக்கரை டாஸ்மாக் கடை எதிரில் குடியிருக்கும் திருநங்கை பாக்கியா என்பவருடன் வசித்து வந்தார். நேற்று காலை, பாக்யாவின் வீட்டின் அருகே உள்ள மரத்தில், தினேஷ் தூக்கிட்டு சடலமாக தொங்கினார். இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருநங்கை பாக்கியாவை, திருவள்ளூரில் தினேஷ் சந்தித்துள்ளார். அப்போது, இருவரும் தங்களது செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டனர். இதையடுத்து அவர்கள், செல்போனில் பேசி வந்தனர். தொடர்ந்து தினேஷ், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், பாக்கியாவை தேடி ஸ்ரீபெரும்புதூர் வந்தார். அங்கேயே தங்கி அவருடன் குடும்பம் நடத்தினார். ஆனால் தினேஷ், வேலைக்கு செல்லாமல், மது போதைக்கு அடிமையானார். இதனால் திருநங்கைக்கும், அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து திருநங்கை பாக்கியா, போதை பழக்கத்தை விட்டு ஒழுங்காக வேலைக்கு செல்ல வேண்டும். இல்லாவிட்டால், உனது பெற்றோருடன் போய்விடு. தன்னுடன் இருக்க வேண்டாம். என கூறியுள்ளார். ஆனாலும் அவர் கேட்கவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் பாக்கியா, தினேஷின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு வரவழைத்தார். பின்னர் அவர்களுடன், தினேஷை அனுப்பிவிட்டு, வெளியூர் செல்வதாக கூறி, சென்றார். இதையடுத்து பெற்றோருடன் சென்ற தினேஷ், பாதி வழியில் யாருக்கும் தெரியாமல் பஸ்சில் இருந்து இறங்கி, மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் வந்தார். அங்கு பாக்கியாவின் வீடு பூட்டப்பட்டு இருந்ததால், மனமுடைந்து அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்ததாக போலீசார் கூறினர். ெதாடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்….

The post ஸ்ரீபெரும்புதூரில் 4 ஆண்டுகளாக திருநங்கையுடன் குடும்பம் நடத்திய வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: