டெல்லி: மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் நகை பறித்த விவகாரத்தில் டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. டெல்லியில் அதிகாலையில் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது சுதாவிடம் 4 சவரன் செயின் பறிக்கப்பட்டது. இருசக்கர வாகனத்தில் மர்மநபர், சுதாவிடம் செயினை பறித்துக் கொண்டு தப்பினார். நகைப் பறிப்பு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருவதாக டெல்லி போலீஸ் விளக்கம் அளித்தது.
The post மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் நகை பறித்த விவகாரத்தில் டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு..!! appeared first on Dinakaran.
