இந்நிலையில் புத்துகுளம் பாலம் வளைவு பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகிறது. தொடர் விபத்தை தடுக்க வலியுறுத்தி புத்தாநத்தம், மெய்யம்பட்டி, கரும்சோலைபட்டி, மாலைக்காட்டுபட்டி, தோப்புப்பட்டி, முத்தனம்பட்டி, ஆலம்பட்டி, காடையம்பட்டி, மணியங்குறிச்சி, கருமலை, புதுப்பட்டி, இடையப்பட்டி, நல்லபொன்னம்பட்டி, அழககவுண்டம்பட்டி, கனவாய்பட்டி, புங்குனிபட்டி, பாறைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு புத்துகுளத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த தாசில்தார் செல்வம், புத்தாநத்தம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கூறி மறியலை தொடர்ந்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புத்துகுளம் பகுதியில் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனால் மக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post பொள்ளாச்சி சுற்றுலா வேன் கவிழ்ந்து 5 பேர் காயம்: கிராம மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.
