படகில் இருந்த மீனவர்கள் அண்ணாமலை (55), கல்யாணராமன் (45), செய்யது இப்ராஹிம் (35), முனீஸ்வரன் (39), செல்வம் (29), காந்திவேல் (69), பாலமுருகன் (25), படகு உரிமையாளர் ஜேசு (39) ஆகிய 8 பேரையும் கைது செய்தனர். பின்னர் படகுடன் 8 மீனவர்களையும் மேல் நடவடிக்கைக்காக மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தடைகாலத்துக்குப் பிறகு மீண்டும் தொழிலைத் துவக்கியுள்ள நிலையில், கடலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post தமிழக மீனவர்கள் 8 பேர் கைது appeared first on Dinakaran.
