இலவச வீட்டுமனை பட்டா கோரி கலெக்டரிடம் மனு

நாமக்கல், ஜூன் 17: ராசிபுரம் அடுத்த முத்துகாளிப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் உமாவிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: எங்களில் பலர் வாடகை வீடுகளில் வசித்து வருகிறோம். ஒரு சிலருக்கு சொந்த வீடு இருந்தாலும், 3 முதல் 5 மகன்கள் இருப்பதால் இடநெருக்கடியாக உள்ளது. ராசிபுரம் அரசு பணிமனை அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post இலவச வீட்டுமனை பட்டா கோரி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: