ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டியில் வீட்டு மனை பட்டா வழங்க ஆய்வு

 

ஒட்டன்சத்திரம், ஜூன் 13: ஒட்டன்சத்திரம் வட்டத்துக்குட்பட்ட காளாஞ்சிபட்டி ஊராட்சியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான ஆய்வு நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி பயனாளிகள் பட்டியலை வைத்து நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கோட்டாட்சியர் கண்ணன், வட்டாட்சியர் சஞ்சய்காந்தி, துணை வட்டாட்சியர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் ஹரிகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

The post ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டியில் வீட்டு மனை பட்டா வழங்க ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: