பைனான்சியரிடம்பணம் கேட்டு மிரட்டல்:3 பேர் கைது

பழநி, மே 22: பழநியில் பெண்ணுடன் சேர்ந்து மது அருந்திய போட்டோவை காட்டி பைனான்சியரிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (44). பைனான்சியர். இவரது நண்பர்கள் பழநி நேதாஜி நகரை சேர்ந்த நாராயணசாமி (44), அடிவாரத்தை சேர்ந்த துர்க்கைராஜ் (45). கடந்த சில நாட்களுக்கு முன்பு நாராயணசாமி வீட்டில் வைத்து துர்க்கைராஜ், சுகுமார், நாராயணசாமி மற்றும் அதே பகுதியை சேர்ந்த சித்ரா ராணி (40) என்ற பெண் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது சித்ராவுடன் சுகுமார் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்தியதை நாராயணசாமி, துர்க்கைராஜ் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

பின்பு அடுத்த நாள் பெண்ணுடன் சேர்ந்து மது அருந்திய வீடியோவை சுகுமாரிடம் காட்டி உனது குடும்பத்துக்கு அனுப்பிவிடுவதாகவும், அனுப்பாமல் இருக்க பணம் கொடுக்க வேண்டும் என கூறி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து சுகுமார் பழநி டவுன் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து நாராயணசாமி, துர்க்கைராஜ், சித்ரா ராணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைனான்சியரிடம்பணம் கேட்டு மிரட்டல்:3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: