நேற்று வெளியான தேர்வு முடிவுகளின்படி தனியார் பள்ளிகளில் பயின்ற 3,794 மாணவர்கள், 3,659 மாணவிகள் என 7,453 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 98.53 சதவீதம். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 0.68% சதவீதம் அதிகரித்துள்ளது. புதுச்சேரி பகுதியில் உள்ள 85 தனியார் பள்ளிகளில் 3,637 மாணவர்கள், 3,289 மாணவிகள் என 6,926 பேர் தேர்வு எழுதினர். இதில் 3,561 மாணவர்கள், 3,266 மாணவிகள் என 6,827 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி பகுதி தேர்ச்சி விழுக்காடு 98.57 சதவீதம். காரைக்கால் பகுதியில் உள்ள 16 தனியார் பள்ளிகளில் 244 மாணவர்கள், 394 மாணவிகள் என 638 பேர் தேர்வு எழுதினர். இதில் 233 மாணவர்கள், 393 மாணவிகள் என 626 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். காரைக்கால் தேர்ச்சி விழுக்காடு 98.12 சதவீதம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு புதுச்சேரி, காரைக்காலில் 98.53 சதவீதம் பேர் தேர்ச்சி: கடந்தாண்டை விட 0.68% அதிகம் appeared first on Dinakaran.
