இந்த வெயில் கொடுமையால் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் சாலைகளில் நடமாட முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரங்களை அகற்றியதாலும் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர். அதேபோல மாவட்டத்தில் 33% வனங்கள் சூழ்ந்து இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டிலேயே மிக குறைவாக கரூர் மாவட்டத்தில் வெறும் 6.09% மரங்கள் மட்டுமே உள்ளதாக கூறுகின்றனர். குறிப்பாக கரூர் பரமத்தி, அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு, கால்நடைகள், தீவனங்கள் கருகிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் நீரை சேமித்தால் வறட்சியை சமாளிக்கலாம் என்பதே இந்த பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.
The post தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயில்: கரூர் பரமத்தியை வெப்ப மண்டல பகுதியாக அறிவிக்க கோரிக்கை appeared first on Dinakaran.
