தூத்துக்குடி: தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் ஊழியர்கள் ஸ்டிரைக்கால் 1000 மெகா வாட் மின்உற்பத்தி நிறுத்தம் செய்யபட்டுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் 22வது நாளாக வேலை நிறுத்தம் செய்கின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக 2 யூனிட்டுகளில் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.