நெல்லை,மே8: நாங்குநேரி எஸ்ஐ ஆபிரகாம் தலைமையில் போலீசார் நான்கு வழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் சாக்கு பையுடன் நின்ற முதியவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏமன் புதுக்குளத்தை சேர்ந்த சிங்கக்குட்டி (70) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய சோதனையில் சாக்கு பையில் தடை செய்யப்பட்ட 5 கிலோ 625 கிராம் புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
The post புகையிலை பொருட்கள் பதுக்கிய முதியவர் கைது appeared first on Dinakaran.
